மாவட்ட செய்திகள்

சாலையில் ஓடிய லாரியில் திடீர் தீ விபத்து

செங்கல்பட்டு அருகே சாலையில் ஓடிய லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் டிரைவர் கீழே குதித்து உயிர் தப்பினார். லாரி சேதம் அடைந்தது.

செங்கல்பட்டு,

நெல்லையில் இருந்து ஒரு டேங்கர் லாரி எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென லாரியின் முன் பக்கத்தில் தீ பிடித்து எரிய தொடங்கியது.

இதை பார்த்த டிரைவர் உத்திரகுமார் (வயது 36), ஓடும் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினார். பின்னர் எரிந்து கொண்டே சாலையில் ஓடிய லாரி, அருகில் உள்ள மலை மீது மோதி மளமளவென தீ பிடித்து எரிந்தது.

இதனைஅடுத்து அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், தீயணைப்புத்துறையினர் மற்றும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு