மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.

தினத்தந்தி

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த கரும்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). முள்ளிப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரதாப்(19). இருவரும் நண்பர்கள். நேற்று அதிகாலை இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பனைமரத்தில் மோதியது.

இதில் சூர்யாவும், பிரதாப்பும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்