மாவட்ட செய்திகள்

சிதம்பரம் அருகே ஆடிட்டர் வீட்டில் நகை பணம் கொள்ளை

சிதம்பரம் அருகே ஆடிட்டர் வீட்டில் நகை பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

அண்ணாமலைநகர்

சிதம்பரம் சி.கொத்தங்குடி பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் ராஜராஜன் (வயது 34). இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நுண் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 13-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு ராஜராஜன் தனது குடும்பத்தினருடன் நாகை மாவட்டம் தேவூரில் உள்ள தனது மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகைகள், 50 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகான்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...