மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இந்த கிராமம் உள்ளது.

தினத்தந்தி

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது வையாவூர் கிராமம். புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இந்த கிராமம் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வையாவூர் ஏரியாகும். கடந்த 2 நாட்களாக ஏரியின் நீர்மட்டம் குறைவதாலும், கடும் கோடை காரணமாக ஏரியில் வளர்ந்து வரும் மீன்கள் செத்து கரையோரம் குவிந்துள்ளது. செத்து கிடக்கும் மீன்களை பறவைகள் எடுத்து சென்று கிராம பகுதியில் போட்டுவிட்டு செல்வதாலும் கரையோரத்தில் மீன்கள் செத்து கிடப்பதாலும் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது மேலும் குடிநீர் ஆதாரத்திற்கும் பாதிப்பு எழுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை