மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே சிறுமி தற்கொலை - தீபாவளிக்கு புத்தாடை எடுக்காததால் சோகமுடிவு

கோவில்பட்டி அருகே, தீபாவளிக்கு தந்தை புத்தாடை எடுத்து கொடுக்காததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள கழுகாசலபுரம் கீழூரில் குடியிருப்பவர் குருசாமி (வயது 42). விவசாயி. இவருடைய மகள் அமுதா( 17). பிளஸ்-2 படித்துள்ளார்.

தீபாவளிக்கு தனக்கு புத்தாடை வாங்கி தரும்படி தந்தை குருசாமியிடம் அமுதா கேட்டாராம். அதற்கு வரும் பொங்கலுக்கு புத்தாடை எடுத்து தருவதாக குருசாமி பதிலளித்தார். தீபாவளிக்கு புத்தாடை கிடைக்காததால் அமுதா மனமுடைந்து காணப்பட்டாராம். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த அவர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை கோவில்பட்டி அரசு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தீபாவளிக்கு தந்தை புத்தாடை வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்