மாவட்ட செய்திகள்

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியல்

கோவில்பட்டி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

கோவில்பட்டி:

நெல்லை மாவட்டத்தில் இருந்த கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பிர்கா கடந்த 2008-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அப்போது சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்து கோவில்பட்டி வட்டத்துக்கு அனைத்து துறைகளும் மாற்றப்பட்டு விட்டன. ஆனால், உள்ளாட்சித்துறை மட்டும் மாற்றப்படவில்லை. இதனால், இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 ஊராட்சிகளும், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திலேயே உள்ளன. இதனால் இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வலியுறுத்தி அரசியல் கட்சியினர், தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். அதன்படி நேற்று முன்தினம் காலையில், பழைய அப்பனேரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் சாலையில் அமர்ந்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அமுதா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தேர்தல் புறக்கணிப்பு என்பதில் மக்கள் உறுதியாக இருந்ததால், வாக்களிக்க விரும்புபவர்களை தடுக்கக்கூடாது. அனைவரும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இளையரசனேந்தல் குறுவட்டத்துக்கு உள்பட்ட எஞ்சிய வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவுகள் வழக்கம் போல் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு