மாவட்ட செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின

கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2 லட்சம் செம்மரக்கட்டைகள் சிக்கின.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி,

காஞ்சீபுரம் மாவட்ட போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருகிணைந்த சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வேகமாக வந்தது.

போலீசார் வாகனசோதனையில் ஈடுபடுவதை பார்த்ததும் காரில் வந்த டிரைவர் உள்பட 3 பேர் தப்பி ஓடி விட்டனர்.

காரை சோதனை செய்தபோது அந்த காரில் 200 கிலோ எடை கொண்ட 20 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

கார் மற்றும் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கும்மிடிப்பூண்டி வனசரகர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்