மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகே வயல்வெளியில் தீ விபத்து

தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் மது குடித்து விட்டு வயல்வெளிகளில் தீ வைத்துள்ளனர்.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை, தெற்குப்பட்டு கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலையில் 100 ஏக்கர் வயல்வெளி நிலங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான வயல்வெளிகளில் எந்தவித நெற்பயிரும் வைக்காமல் கோரைப்புற்கள், செடி, கொடிகள் வளர்ந்து காடு போல் காணப்பட்டன.

நேற்று இரவு 8 மணி அளவில் மர்மநபர்கள் தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் மது குடித்து விட்டு வயல்வெளிகளில் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவி 60 ஏக்கர் காலி நிலம் 1 கிலோ மிட்டர் தூர அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது.

தகவல் அறிந்து மாமல்லபுரம், திருப்போரூர், சிறுசேரி, திருக்கழுக்குன்றம் பகுதி தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களுடன் சென்று கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இந்த தீ விபத்தால் திருவிடந்தை, தெற்குப்பட்டு கிராமம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை