மாவட்ட செய்திகள்

நெல்லை அருகே அரசு பஸ் மோதி பாலிடெக்னிக் மாணவர் பலி

நெல்லை அருகே அரசு பஸ் மோதி, பாலிடெக்னிக் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

நெல்லை,

நெல்லை அருகே உள்ள காங்கேயன்குளத்தை சேர்ந்தவர் சண்முகம். அவருடைய மகன் சுடலைமணி (வயது 17). இவர் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சுடலைமணி நேற்று தனது மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு வந்து கொண்டு இருந்தார். நெல்லை அருகே உள்ள அபிஷேகப்பட்டி பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுடலைமணி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுடலைமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பஸ் மோதி, பாலிடெக்னிக் மாணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு