மாவட்ட செய்திகள்

ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்; காவலாளி பலி

ஒரகடம் அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காவலாளி பலியானார்.

தினத்தந்தி

படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரகடம் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. ஒரகடம் அருகே செல்லும்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளும், ஷேர் ஆட்டோவும் மோதிக் கொண்டன. இதில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன், ( வயது 36), ஷேர் ஆட்டோவில் சென்ற செங்கல்பட்டு அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த சுஜாதா (36), ஒரகடம் பகுதியை சேர்ந்த காவலாளி ரங்கநாதன் (50) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரங்கநாதனை மேல் சிகிச்சைக்காக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை