மாவட்ட செய்திகள்

படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

படப்பை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த ஆதனூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 80). இவர் தனது பேரன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் ஆதனூர் பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் பச்சையப்பன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் முதியவர் இரு தினங்களுக்கு முன் வீட்டை வீட்டு வெளியே சென்றுள்ளதாகவும் மனவிரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு