மாவட்ட செய்திகள்

அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு

அரக்கோணம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.

தினத்தந்தி

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உள்ள நம்மாநேரி கிராமத்தை சேர்ந்தவர் மகிமைராஜ் (வயது 30), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜான்சிராணி (26). இவர்களது மகன் சியோன்ராஜ் (10). ஜான்சிராணி நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரி அருகே விளையாடிக்கொண்டிருந்த சியோன்ராஜ் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே சியோன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து