மாவட்ட செய்திகள்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே பஸ்-கார் மோதல்; 5 மாணவ- மாணவிகள் காயம்

சிங்கப்பெருமாள் கோவில் அருகே பஸ்- கார் மோதிய விபத்தில் 5 மாணவ- மாணவிகள் காயம் அடைந்தனர்.

தினத்தந்தி

வண்டலூர்,

செங்கல்பட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து நேற்று முன்தினம் மாலை மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு கார் ஒன்று சிங்கப்பெருமாள்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. திருத்தேரி அருகே உள்ள வளைவில் கார் திரும்பும் போது சென்னையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றுக்கொண்டிருந்த அரசு பஸ் கண் இமைக்கும் நேரத்தில் கார் மீது மோதியது.

இதில் காரில் இருந்த மாணவ-மாணவிகள் ஸ்ரீமதி (வயது 10), தீபக்(6), தர்ஷ்சன்(7), மோகனப்பிரியா (6), மூர்த்தி (7) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்