மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் அருகே நகர பஞ்சாயத்து குப்பை வண்டியை மறித்து போராட்டம் - கிராமத்தில் குப்பை கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

திருச்செந்தூர் அருகே, கிராமத்தில் குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து நகர பஞ்சாயத்து குப்பை வண்டியை மறித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

தினத்தந்தி

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதியில் உள்ள குப்பைகளை, ராணிமகாராஜபுரம் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து குப்பைகளை, தங்கள் கிராமத்தில் கொட்டுவதால் நஞ்சை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது. அதில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உயிரிழக்கின்றன. அதேபோல் பொதுமக்களுக்கு நோய் பரவவும் வாய்ப்புள்ளது என்றும், அதனால் ராணிமகாராஜபுரம் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும். அதேபோல் இனிமேல் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் கழகம் சார்பில், மாநில பொது செயலாளர் சரவணன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் நாராயணன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குப்பை கொட்ட வந்த திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து வாகனத்தை மறித்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன், நகர பஞ்சாயத்து அலுவலர் பாண்டி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட மாட்டோம் என்றும், ஏற்கனவே கொட்டிய குப்பைகளை சரிசெய்து தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்