மாவட்ட செய்திகள்

திருக்கழுக்குன்றம் அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருக்கழுக்குன்றம் அருகே கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த தத்தலூர் கிராமம் பாடசாலை தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது வீட்டின் பின்புறம் வருவாய் கால்வாய் உள்ளது. அதை கடந்து செல்ல மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கால்வாயில் தண்ணீர் நிரம்பியிருந்தது.
நேற்று முன்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு செல்வதற்காக ரங்கநாதன் அந்த மரப்பாலம் வழியாக சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கால்வாயில் விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் மூச்சு திணறி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் விரைந்து சென்று ரங்கநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு