மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் மோதல்; 2 பேர் கைது

திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கல்லம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுணா (வயது 37). இவர் நேற்றுமுன்தினம் தன்னுடைய வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சோனியா ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசியுள்ளார். அது குறித்து கேட்டபோது சுகுணாவையும் அவரது கணவர் குட்டி, உறவினர் பப்பு, சின்னப்பொண்ணு ஆகியோரை சோனியாவின் உறவினர்களான ஆரோன், எட்வின், பாலா, தர்மன் ஆகியோர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சுகுணா தனது உறவினரான குட்டி, செல்வம், பப்பு, சாந்தி, வசந்தா, மணிகண்டன், சின்னபொண்ணு ஆகியோருடன் சேர்ந்து சோனியாவையும் அவரது உறவினர் பிரகாஷ், எட்வின் ஆகியோரை தாக்கியுள்ளனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மப்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து ஆரோன் (35), குட்டி (44) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்