மாவட்ட செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக இறந்தார்.

தினத்தந்தி

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் கிராமம் ராமச்சந்திரா தெருவை சேர்ந்தவர் தனவள்ளி (வயது 65). இவர் அருகே உள்ள பால் ரெட்டி கண்டிகை கிராமத்தில் நடந்து வரும் தேசிய ஊரக வேலை திட்ட பணியில் பங்கேற்க தனது பேரன் திலீப்குமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். ஏரிக்கரை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த தனவள்ளி தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து