மாவட்ட செய்திகள்

விளாத்திகுளம் அருகே ஓடை பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

விளாத்திகுளம் அருகே ஓடை பாலத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.

விளாத்திகுளம்,

விளாத்திகுளம் அருகே ஜமீன் கரிசல்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 40). இவர் விளாத்திகுளத்தில் உள்ள இனிப்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் இரவில் தனது ஊரில் நாகலாபுரம் ரோடு பகுதியில் உள்ள ஓடைப்பாலத்தின் தடுப்பு சுவரில் படுத்து தூங்கினார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாலத்தின் அடியில் தவறி விழுந்தார். சுமார் 8 அடி ஆழ பள்ளத்தில் பாறையில் விழுந்ததால், பலத்த காயம் அடைந்த கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விளாத்திகுளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே போலீசார் விரைந்து சென்று, இறந்த கருத்தப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு