மாவட்ட செய்திகள்

விழுப்புரம் அருகே: பறிமுதல் செய்யப்பட்ட 3,395 லிட்டர் எரிசாராயம் தீ வைத்து அழிப்பு

விழுப்புரம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட 3,395 லிட்டர் எரிசாராயம் தீ வைத்து அழிக்கப்பட்டது.

தினத்தந்தி

விழுப்புரம்,

விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் ஏரி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 97 கேன்களில் இருந்த 3,395 லிட்டர் எரிசாராயத்தை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சத்து 85 ஆயிரமாகும். பறிமுதல் செய்யப்பட்ட இந்த எரிசாராய கேன்கள், மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இவற்றை அழிப்பதற்கு அனுமதி கேட்டு திண்டிவனம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து எரிசாராயத்தை அழிப்பதற்கு அனுமதியளித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில் நேற்று போலீஸ் நிலையத்தில் இருந்து வேன் மூலம் எரிசாராய கேன்களை விழுப்புரம் அருகே பிடாகத்தில் உள்ள தென்பெண்ணையாற்றுக்கு போலீசார் எடுத்துச்சென்றனர். அங்குள்ள ஆற்றின் கரையோரத்தில் நீதிபதி வீரணன், இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலையில் 3,395 லிட்டர் எரிசாராயம் கீழே ஊற்றப்பட்டு தீ வைத்து அழிக்கப்பட்டது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்