மாவட்ட செய்திகள்

கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை; வாலிபர் கைது

மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4-வது பிளாக்கை சேர்ந்தவர் விமலா (வயது 68). இவருக்கு 2 மகன், 2 மகள்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி விமலா, கடந்த 4-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

SCROLL FOR NEXT