பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4-வது பிளாக்கை சேர்ந்தவர் விமலா (வயது 68). இவருக்கு 2 மகன், 2 மகள்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி விமலா, கடந்த 4-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.