மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளுக்கு செல்ல புதிய பாதை திறப்பு.

தினத்தந்தி

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகளுக்காகவும், பயணிகளின் வசதிக்காவும் விரிவாக்க பணிகள் செய்யப்பட்டு வருகிறது. விமான சேவைகள் விரைவாக இருக்க ஓடுபாதைகள் அருகே விமான நடைமேடைகள் அமைக்கப்பட்டன. இந்த நடைமேடைகளில் இருந்து ஓடுபாதைக்கு விமானங்கள் விரைவாக செல்லக்கூடிய வகையில் புதிதாக பாதை அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் உள்ள 2 ஓடுபாதைகளுக்கு நடுவே 1970 மீட்டர் நீளத்திலும், 25 மீட்டர் அகலத்திலும் இந்த பாதை அமைக்கப்பட்டது.

இந்த பாதை மூலமாக விமானங்கள் விரைவாக நடைமேடைக்கும், ஓடுபாதைக்கும் வந்து செல்ல முடியும். இதனால் ஓடுபாதைக்கு செல்லக் கூடிய விமான போக்குவரத்து நேரம் குறையும். புதிதாக அமைக்கப்பட்ட பாதை நேற்று விமான போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. இந்த பாதையில் முதல் முறையாக வந்த விமானத்துக்கு இருபக்கமும் நின்று தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்