கோப்புப்படம் 
மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் 26 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை - சுகாதாரத்துறை தகவல்

கர்நாடகத்தில் புதிதாக 26 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 23 ஆயிரத்து 353 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 784 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 24 ஆயிரத்து 137 ஆக அதிகரித்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 4 பேர், பல்லாரியில் 10 பேர், பெலகாவியில் 12 பேர், பெங்களூரு புறநகரில் 25 பேர், பெங்களூரு நகரில் 437 பேர், பீதரில் 4 பேர், சாம்ராஜ்நகரில் 8 பேர், சிக்பள்ளாப்பூரில் 30 பேர், சிக்கமகளூருவில் 5 பேர், சித்ரதுர்காவில் 11 பேர், தட்சிண கன்னடாவில் 42 பேர், தாவணகெரேயில் 10 பேர், தார்வாரில் 14 பேர், கதக்கில் 2 பேர், ஹாசனில் 24 பேர், கலபுரகியில் 20 பேர், குடகில் 12 பேர், கோலாரில் 24 பேர், கொப்பலில் ஒருவர், மண்டியாவில் 13 பேர், மைசூருவில் 22 பேர், ராய்ச்சூரில் 5 பேர், ராமநகரில் ஒருவர், சிவமொக்காவில் 4 பேர், துமகூருவில் 11 பேர், உடுப்பியில் 10 பேர், உத்தர கன்னடாவில் 9 பேர், விஜயாப்புரா, யாதகிரியில் தலா 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நகரில் 3 பேர், பெங்களூரு புறநகர், தார்வார், துமகூருவில் தலா ஒருவர் என 6 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 12 ஆயிரத்து 124 ஆக அதிகரித்து உள்ளது.

நேற்று ஒரே நாளில் 1,238 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 2 ஆயிரத்து 817 ஆக உயர்ந்து உள்ளது. 9 ஆயிரத்து 177 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 210 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 491 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. நேற்று 26 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பும், ஹாவேரியில் கொரோனாவுக்கு பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு