மாவட்ட செய்திகள்

பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைவு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 7 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகினர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியாகி வருவோரின் எண்ணிக்கையும் தமிழக அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையின் காரணமாக குறைந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 144 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 11 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 830 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 856 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,688 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 7 பேர் கொரோனா தொற்றுக்கு இறந்து உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்