மாவட்ட செய்திகள்

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருது

பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு காமராஜர் விருதை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

தினத்தந்தி

விழுப்புரம்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ- மாணவிகள் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்று, கல்வி செயல்பாடுகள் உள்ளிட்ட பிற தனித்திறன்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கப்படுகிறது.

அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் 2016-17-ம் ஆண்டிற்கான காமராஜர் விருது வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு பிளஸ்-2 மாணவ- மாணவிகள் 15 பேருக்கு காமராஜர் விருதான தலா ரூ.20 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழையும், எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகள் 15 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் நீலாம்பாள், கிருஷ்ணப்பிரியா, சசிகலா, கிருஷ்ணன், ஆனந்தன், ரத்தினசெல்வி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு