மாவட்ட செய்திகள்

மாமல்லபுரம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

மாமல்லபுரம் அருகே தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தினத்தந்தி

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் துளசிதாஸ் (வயது 48). இவர் திருப்போரூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல வேலைக்கு சென்ற துளசிதாஸ் வேலை முடிந்து மீண்டும் தனது மோட்டார் சைக்கிளில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். மாமல்லபுரத்தை அடுத்த பையனூர் என்ற இடத்தில் வரும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் நிலைதடுமாறி அவரது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் தகவலின் பேரில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த துளசிதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு