மாவட்ட செய்திகள்

மெரின்டிரைவ் கடற்கரையில் பட்னாவிசுடன் நடைபயிற்சி செய்த கோவா முதல்-மந்திரி

மும்பை மெரின் டிரைவ் கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாக்கும் சேகரித்தார். அப்போது கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்தும் உடன் இருந்தார்.

மும்பை,

மராட்டியத்தில் வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில் கூட்டணியை ஆதரித்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மராட்டியத்தில் பா.ஜனதா-சிவசேனா கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா மற்றும் மும்பையில் நடந்த பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.

இந்தநிலையில், நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பை மெரின்டிரைவ் கடற்கரையில் நடைபயிற்சி செய்தார். பின்னர் நடைபயணமாக வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டார். அப்போது அவருடன் கோவா முதல்-மந்திரி பிரமோத் சவாந்தும் இணைந்து நடைபயிற்சி மேற்கொண்டபடி வாக்கு சேகரித்தார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், நடைபயிற்சியின் போது சிறந்த ஆற்றல் மற்றும் மராட்டிய மக்களிடம் இருந்து அற்புதமான வரவேற்பு கிடைத்ததாக, பதிவிட்டு உள்ளார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...