மாவட்ட செய்திகள்

மணலி விரைவு சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

பட்டினத்தார் கோவில் தெரு, மாணிக்கம் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

திருவொற்றியூர்,

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட பட்டினத்தார் கோவில் தெரு, மாணிக்கம் நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.

அதேபோன்று மணலி விரைவு சாலையோரம் முல்லை நகர், கார்கில் நகர் என பக்கிங்காம் கால்வாய் வரை சுமார் 2.5 கி.மீ. தூரத்துக்கு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

இதற்காக மணலி விரைவு சாலையோரம் வடிகால்வாய் அமைக்கும் இடத்தை ஆக்கிரமித்து கட்டி இருந்த கட்டிடங்களை திருவொற்றியூர் மண்டல செயற்பொறயாளர் பால்தங்கதுரை, உதவி செயற்பொறியாளர் கோவிந்தராஜ், உதவி பொறியாளர் அமல்குமார் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் இடித்து அகற்றினர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்