மாவட்ட செய்திகள்

நிரம்பி வழியும் தடுப்பணைகள்

சிட்றபாக்கம் தடுப்பணைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஒதப்பை பகுதியில் உள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

தினத்தந்தி

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி ஆறு அணை முழுவதுமாக நிரம்பியதால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது மழை நின்று விட்டதால் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்று காலை நீர் திறப்பு 6 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள சுருட்டப்பள்ளி, சிட்றபாக்கம் தடுப்பணைகள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஒதப்பை பகுதியில் உள்ள தடுப்பணைகள் முழுவதுமாக நிரம்பி வழிகின்றன.

நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளதால் ஆரணி ஆறு மற்றும் கொசஸ்தலை ஆறு ஓரமாக உள்ள 150 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு