மாவட்ட செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ராகுல் காந்தியுடன் சரத்பவார் ஆலோசனை

நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.

தினத்தந்தி

மும்பை,

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை டெல்லியில் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகர்ஜுன கார்கே, அசோக் கெலாட், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இந்த தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் தொகுதிகள், வேட்பாளர்கள் விவரம் உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.

மேலும் இந்த கூட்டத்தில் மராட்டியத்தில் நிலவும் மின்வெட்டு, வறட்சி போன்றவை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறிய நவாப் மாலிக், இதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்