மாவட்ட செய்திகள்

சென்னையில் போலீஸ் வேலைக்கான உடல் தகுதி தேர்வில் பெண்கள் பங்கேற்பு

தமிழக காவல்துறையில் ஆண்-பெண் இரண்டாம் நிலை போலீசார், சிறைத்துறையில் 2-ம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் போன்ற பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஏற்கனவே நடத்தப்பட்டது.

தினத்தந்தி

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடந்து வருகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வரை ஆண்களுக்கு மட்டும் உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது.

நேற்று பெண்கள் கலந்து கொண்ட ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வு நடந்தது. நேற்றைய தேர்வில் 370 பெண்கள் பங்கேற்றனர். அதில் கர்ப்பமாக இருந்த 5 பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். குழந்தை பெற்று உடல் நலமான பிறகு,

தனியாக அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு நடக்கிறது. இன்றைய தேர்வில் திருநங்கை ஒருவரும் பங்கேற்க உள்ளார். ஆரம்ப கட்ட உடல் தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 2-ம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து