மாவட்ட செய்திகள்

உடுமலையில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

உடுமலையில் பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினத்தந்தி

உடுமலை,

உடுமலை சங்கிலி வீதியில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கருப்பண்ணசாமி பூஜை, திருமூர்த்தி மலையில் இருந்து கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வருதல்,புண்ணியார்ச்சனை, கொடியேற்றுதல்,காப்புகட்டுதல், முளைப்பாலிகையிடுதல்,கும்பம் எடுத்து வருதல்,பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு வைத்தல், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவையொட்டி தினசரி ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம்,பக்தி பாடல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கொடி இறக்குதல்,கும்பம் விடுதல் நிகழ்ச்சிகளும்,நாளை(புதன் கிழமை)இரவு 7 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 9 மணிக்கு மகா அபிஷேகம் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை நாடார் உறவின் முறையார் சங்கம், உடுமலை நாடார் மகளிர் அணி, இளைஞர் அணி ஆகியவற்றின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்