மாவட்ட செய்திகள்

திருக்கடையூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

திருக்கடையூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் பொறையாறு போலீசார் நடவடிக்கை.

தினத்தந்தி

திருக்கடையூர்,

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து திருக்கடையூர் பகுதிகளில் சாலைகளில் நடந்து செல்வோர் மற்றும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் யாராவது முக கவசம் அணியாமல் செல்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் பணியில் பொறையாறு போலீசார் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களை நிறுத்தி அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு