மாவட்ட செய்திகள்

வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம்

வேலூர் மாநகராட்சியில் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து மாநகராட்சி சார்பில் கமிஷனர் சங்கரன் மேற்பார்வையில், 2-மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று வணிகர்களுக்கு மருந்து பெட்டகம் வழங்கினர்.

மண்டிதெரு, லாங்குபஜார், பழைய பஸ் நிலையப்பகுதிகளில் கடைகளுக்கு சென்று அவர்கள் வழங்கினர். அப்போது கொரோனா குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 2-வது மண்டலத்தில் மட்டும் சுமார் ஆயிரம் வணிகர்களுக்கு மேல் இந்த மருந்து பெட்டகம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்