மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைக்கக்கோரி நாற்று நடும் போராட்டம்

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது.

தினத்தந்தி

ஜெயங்கொண்டம்,

ஜெயங்கொண்டம் அருகே கழுவந்தோண்டி பஸ் நிறுத்தத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தற்போது பெய்த மழையால் சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதையெடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராததால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து