மாவட்ட செய்திகள்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவ-மாணவிகள் பங்கேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை நகர் முழுவதும் தீவிரமாக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அம்பத்தூரில் உள்ள அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

சென்னை,

இதில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், மண்டல அதிகாரி ஆர்.பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர்கள் ஜெயலட்சுமி, சுப்பிரமணி ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகளிடம் பிளாஸ்டிக் தீமைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஐ.டி.ஐ. மாணவ- மாணவிகள் பேரணியாக சென்றனர். பிளாஸ்டிக் தீமைகள் குறித்த கோஷங்கள் எழுப்பியும், பாக்கு மர தட்டுகள், சில்வர் பாத்திரங்கள், துணிப்பைகள் உள்ளிட்டவைகளை கையில் ஏந்தியபடியும் சாலைகளில் பேரணியாக நடந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

SCROLL FOR NEXT