மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 தேர்வு நாளை தொடங்குகிறது 21,748 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்கும் பிளஸ்-1 தேர்வை 21 ஆயிரத்து 748 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

தினத்தந்தி

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் உள்ள 192 பள்ளிகளை சேர்ந்த 9 ஆயிரத்து 832 மாணவர்கள், 11 ஆயிரத்து 916 மாணவிகள் ஆக மொத்தம் 21 ஆயிரத்து 748 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

இதில் தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 100 பேரும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 648 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.

இதற்காக தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 48 தேர்வு மையங்களும், கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 26 தேர்வு மையங்களும் ஆக மொத்தம் 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வை கண்காணிக்க முதுகலை ஆசிரியர்கள் பணி மூப்பின் அடிப்படையில் துறை அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்