மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: 38,244 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்

சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-1 பொதுத்தேர்வை 38 ஆயிரத்து 244 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

சேலம்,

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ந்தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது. சேலம் மாவட்டம் முழுவதும் 17 ஆயிரத்து 683 மாணவர்கள், 20 ஆயிரத்து 561 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 244 பேர் தர்வு எழுதுகின்றனர்.

மாணவ, மாணவிகள் வசதியாக தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 130 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பிளஸ்-1 தேர்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

320 பறக்கும் படை

அதே போன்று தேர்வுகள் சிறப்பாக நடைபெறும் வகையில் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை கண்டுபிடிக்க மாவட்டம் முழுவதும் முதுகலை ஆசிரியர்கள் தலைமையில் 320 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து மாவட்ட முதன்ம அதிகாரி கணேஷ்மூர்த்தி கூறும் போது, பிளஸ்-1 பொதுத்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...