மாவட்ட செய்திகள்

போடியில், புழுக்களுடன் காணப்பட்ட ரே‌‌ஷன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் மறியல்

போடியில் புழுக்களுடன் காணப்பட்ட ரே‌‌ஷன் அரிசியை பொதுமக்கள் சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

போடி,

போடி நகராட்சி 1-வது வார்டு புதூரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று விலையில்லா அரிசி வழங்கப்பட்டது. அந்த அரிசி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு தரமில்லாமலும், புழுக்களுடனும் காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ரேஷன் கடை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஊழியர்கள், எங்களுக்கு வருகிற அரிசியைதான் நாங்கள் வினியோகம் செய்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தாங்கள் வாங்கிய விலையில்லா அரிசியுடன் போடியில் உள்ள மூணாறு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தனர். அங்கு தேவர் சிலை அருகே ரேஷன் அரிசியை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து போடி நகர் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைய செய்தனர். மேலும் ரேஷன் கடையிலும் விலையில்லா அரிசி வினியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற் படுத்தியது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து