மாவட்ட செய்திகள்

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 4½ கிலோ கஞ்சா பறிமுதல்: என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது

நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்சில் 4½ கிலோ கஞ்சா கடத்திய என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

களியக்காவிளை,

குமரி மாவட்டம் வழியாக பஸ், ரெயில்கள் மூலம் கேரளாவுக்கு கஞ்சா மற்றும் போதைபொருட்களை கடத்தும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் சம்பவத்தை தடுப்பதற்காக தமிழக-கேரள எல்லையில் கேரள மதுவிலக்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ஒரு கேரள அரசு பஸ் சென்றது.

இந்த பஸ் தமிழக-கேரள எல்லையான அமரவிளை சோதனைச்சாவடி பகுதியில் சென்ற போது, அங்கு பணியில் இருந்த கேரள மதுவிலக்கு போலீசார் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, பஸ்சில் இருந்த 2 இளைஞர்களின் பையில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கஞ்சாவை கடத்தியது திருவனந்தபுரம் காரியாவட்டம் பகுதியை சேர்ந்த ராகுல் (வயது 24), பாங்கப்பாறை பகுதியை சேர்ந்த கரீஷ் (21) என்பது தெரியவந்தது. ராகுல் பெங்களூருவில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். கரீஷ் திருவனந்தபுரத்தில் புகைப்பட கலைஞராக உள்ளார். இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு