மாவட்ட செய்திகள்

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

ஒத்திகை

தினத்தந்தி

விழுப்புரம்,

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விழுப்புரத்தில் உள்ள மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன் கலந்துகொண்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். ஆண்டுதோறும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் சுதந்திர தின விழாவில் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகளை நேரில் வரவழைத்து கவுரவிக்காமல் அவர்களது வீட்டிற்கே சென்று கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு சுதந்திர தின விழாவை குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளை கொண்டு எளிமையான முறையில் நடத்தவும், குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை கொண்டு அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி விழா நடைபெறும் மைதானத்தில் நேற்று மாலை காவல்துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பு ஒத்திகையில் ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருட்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபா, பிரகாசம், துரை, பாலமுருகன் மற்றும் போலீசார் கலந்துகொண்டு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு