மாவட்ட செய்திகள்

சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்

சாலையில் அனாதையாக கிடந்த ‘வாக்கி-டாக்கி’ கருவி போலீசார் மீட்டு, மாநகராட்சி அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் எதிரில் உள்ள சாலையில் நேற்று காலை வாக்கி-டாக்கி கருவி ஒன்று அனாதையாக கிடந்தது. அந்த கருவியை கண்டெடுத்த வேன் டிரைவர் ஆகாஷ், அண்ணாசாலை போலீசாரிடம் ஒப்படைத்தார். அண்ணாசாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், வாக்கி-டாக்கி கருவியை சாலையில் போட்டது யார்? என்று விசாரணை நடத்தினார்.

விசாரணையில், சென்னை மாநகராட்சி சுகாதாரதுறை ஆய்வாளர் சுப்பராயலு, தனது மோட்டார் சைக்கிளில் செல்லும் போது, அந்த வாக்கி-டாக்கியை தவறுதலாக சாலையில் போட்டுச்சென்றது தெரிய வந்தது. அதன்பேரில் வாக்கி-டாக்கி கருவி சுப்பராயலுவிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. சாலையில் கண்டெடுத்த வாக்கி-டாக்கி கருவியை பத்திரமாக ஒப்படைத்த வேன் டிரைவர் ஆகாசுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து