மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் அருகே வாக்கு எண்ணும் மையத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

மறைமலைநகர் அருகே உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சி மன்ற தலைவர், 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 24 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இரும்பு பெட்டியில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான மறைமலைநகர் அருகே மல்ரோஜபுரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு தேர்தல் அதிகாரிகள் கொண்டு சென்று அங்கு பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆதரவாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் மையம் அருகே இரவு காத்த கிளியாக 24 மணி நேரமும் காத்திருந்து தங்களது தரப்பில் வாக்கு மையத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மல்ரோஜபுரத்தில் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து உள்ளனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு