மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை

பாகல்கோட்டையில் போலீஸ் சூப்பிரண்டு வீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் நேற்று திடீரென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு,

கொப்பல் மாவட்டம் குஷ்டகி தாலுகா மிட்டால்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் ஹரிஜான் (வயது 28). இவர் கடந்த 2012-ம் ஆண்டு போலீஸ் துறையில் போலீஸ்காரராக பணிக்கு சேர்ந்தார். தொடக்கத்தில் தாவணகெரேயில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணி செய்த அவர் பின்னர் பாகல்கோட்டைக்கு பணி இடமாறுதல் பெற்றார்.

அதைத்தொடர்ந்து அவர் கடந்த ஒரு ஆண்டாக பாகல்கோட்டை டவுனில் உள்ள பாகல்கோட்டை போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்யாந்தின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் பாதுகாப்பு பணியில் இருந்த மஞ்சுநாத் ஹரிஜான், திடீரென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தனக்கு தானே சுட்டு கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு