மாவட்ட செய்திகள்

பொங்கல் விடுமுறை முடிந்து புறப்பட்டனர் நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது

பொங்கல் விடுமுறை முடிந்ததை தொடர்ந்து நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

நெல்லை,

பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களில் தங்கி இருந்து பணிபுரிகிறவர்கள் அவரவர் சொந்த ஊருக்கு வந்தனர். இந்த நிலையில் ஒரு சில பள்ளிகள் விடுமுறை முடிந்து இன்று (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊருக்கு வந்திருந்தவர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு நேற்று புறப்பட்டனர். இதேபோல் தனியார் நிறுவனங்களில் பணிபுரிகிறவர்கள் மற்றும் தொழில் நிறுவனத்தினரும் நேற்று புறப்பட்டனர்.

அவர்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அந்தியோதயா, கன்னியாகுமரி, நெல்லை, அனந்தபுரி, செந்தூர் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏறி சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த ரெயில்களில் முன்பதிவு பெட்டிகள் நிரம்பியதுடன், பொது பெட்டிகளில் நெருக்கடியாக நின்று கொண்டே பயணிகள் பயணம் செய்தனர்.

இதேபோல் பெங்களூரு, கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பொதுப் பெட்டிகளில் ஏறினர். இதேபோல் நெல்லை வழியாக கேரளா மாநிலத்துக்கு செல்லும் குருவாயூர் உள்ளிட்ட ரெயில்களும் பயணிகள் அவரவர் வேலை செய்யும் இடங்களுக்கு சென்றனர்.

இதே போல் நெல்லை புதிய பஸ் நிலையத்திலும் பயணிகள் குவிந்தனர். அங்கிருந்து புறப்பட்ட மதுரை, திருச்சி, சேலம், சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு ஆகிய பஸ்களில் போட்டி போட்டு இடம் பிடித்து பயணம் செய்தனர். பயணிகள் தேவைக்கு ஏற்ப குறிப்பிட்ட ஊர்களுக்கு போக்குவரத்து கழக அதிகாரிகள் சிறப்பு பஸ்களை இயக்கினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு