மாவட்ட செய்திகள்

உடலில் பெட்ரோல் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை

குடும்பத் தகராறில் தன்னிடம் கோபித்துக்கொண்டு மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த வாலிபர், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சுந்தரவரதன்(வயது 32). இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். துபாயில் வேலை பார்த்து வந்த சுந்தரவரதன், கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.

ஆனால் அவருக்கு, இங்கு எதிர்பார்த்த வேலை எதுவும் கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த சுந்தரவரதன், குடிப்பழக்கத்துக்கு ஆளானார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதில் ஆத்திரம் அடைந்த ஜோதி, கணவருடன் கோபித்துக்கொண்டு தனது மகன்களுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். மனைவி பிரிந்து சென்றதால் மேலும் மனவேதனை அடைந்த சுந்தரவரதன், நேற்று முன்தினம் மாலை தனது வீட்டு வாசலில் திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுந்தரவரதன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி சாத்தாங்காடு போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்