மாவட்ட செய்திகள்

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம்

கூலி உயர்வு கேட்டு விசைத்தறி நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டது.

தினத்தந்தி

போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரி பேட்டை, சொரக்காய்பேட்டை, பொம்மராஜுபேட்டை, ஆர்.கே. பேட்டை, அம்மையார்குப்பம், வங்கனூர் போன்ற பகுதிகளில் விசைத்தறி நெசவாளர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை திருத்தணி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஆர்.டி.ஓ. சத்யா பலமுறை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

தீர்வு எட்டப்பட்டது

இந்நிலையில், நேற்று பொதட்டூர்பேட்டை மற்றும் ஆர்.கே. பேட்டை பகுதிகளில் திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா தலைமையில் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு அளிக்க விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டது. இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த விசைத்தறி நெசவாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு