மாவட்ட செய்திகள்

வேலூரில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 23 ஆட்டோக்கள் பறிமுதல்

வேலூரில் தகுதிச்சான்று புதுப்பிக்காத 23 ஆட்டோக்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வேலூர்,

வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜசேகரன், ஞானவேல் ஆகியோர் நேற்றுமுன்தினம் காலை வேலூர் பழைய பஸ் நிலையம், வேலூர்ஆற்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுனர் உரிமம் உள்ளதா? இன்சூரன்ஸ் உள்ளதா? தகுதிச்சான்று புதுப்பிக்கப்பட்டு உள்ளதா? எனச் சோதனைச் செய்தனர்.

இந்த ஆய்வின்போது 4 சரக்கு ஆட்டோ, 19 பயணிகள் ஆட்டோ என 23 ஆட்டோக்கள் தகுதிச்சான்றை புதுப்பிக்காமல் இயங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாலை பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய வாகனச் சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.36 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை