மாவட்ட செய்திகள்

பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கினார். நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன், கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் நூல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜவுளி தொழிலை பாதுகாக்க ஜவுளி பாதுகாப்பு கழகத்தை அமைக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு