மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 207 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன்மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஊழியரான பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மனைவி பிரியாவுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, ரேஷன் கார்டு, பசுமை வீடுகள், இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 207 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன்மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பணியின் போது உயிரிழந்த மின்வாரிய ஊழியரான பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்த சிவா என்பவரது மனைவி பிரியாவுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவரிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்