மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே மண்ணூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

பொள்ளாச்சி அருகே மண்ணூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ராமபட்டிணம் ஊராட்சியில் பொன்மலை யூர் கிராமம் உள்ளது. இந்த பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்ய வில்லை.

இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பாலக்காடு ரோட் டில் மண்ணூரில் நேற்று மாலை திடீரென்று காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகள் மோட்டார் பிரச்சினை காரணமாக சீரான குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. நாளைக்குள் (இன்று) மோட்டார் பழுதை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்றனர்.

அதை ஏற்று பொதுமக்கள் போராட்டத் தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக பாலக்காடு ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு